மாண்பு மிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு சின்னவர் அவர்களின் வழிகாட்டுதலோடு புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் Walking With MLA என்ற நிகழ்வில் இன்று வார்டு எண் 7ல் நகராட்சி நிர்வாக தூய்மை பணியாளர்கள், அதிகாரிகளுடன் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிறைவேற்றக்கூடிய பணிகளை துறை சார்ந்த அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியதோடு, பரவலாக நகராட்சி பகுதியில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை சீர் செய்வதற்க்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தும், குடிநீர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வதற்கும், குடியிருப்பு பகுதிகளில் பழுதான நிலையில் இருக்கும் மின்விசை மோட்டார்களுடன் கூடிய நீர்த்தேக்க தொட்டிகளை சீர் செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள அரசு அதிகாரிகளுக்கு வலியுறுத்திய புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை முத்துராஜா MBBS MLA அவர்கள்.
இந்நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர் திருமதி ராசாத்தி நைனா முகமது வட்டக் கழகச் செயலாளர்கள் திரு. செல்வம் கண்மணி சுப்பு மற்றும் வட்டப் பிரதிநிதிகள் , கழக நிர்வாகிகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment