மஞ்சப்பேட்டையில் வேளாண்மை துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 25 February 2024

மஞ்சப்பேட்டையில் வேளாண்மை துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மஞ்சப்பேட்டை கிராமத்தில் வேளாண் இடுபொருட்கள்.  நுண்ணூட்டச் சத்து மற்றும் வேளாண் விற்பனை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் மஞ்சப்பேட்டையில் நடைபெற்றது. இவ்விழா ஆத்மா கமிட்டி சேர்மன் நியூஸ் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கந்தர்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தோழர் மா.சின்னதுரை அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். 

வேளாண் உதவி இயக்குனர் அன்பரசன், தோட்டக்கலை உதவி இயக்குனர் காளீஸ்வரன், ஒழுங்குமுறை விற்பனை கண்காணிப்பாளர் பிரதீபா, வேளாண் உதவியாளர் விக்னேஷ், வேளாண்மை விரிவாக்க பணியாளர்கள் செல்வம், சுப்பிரமணியன், சங்கீதா, ராஜு ஊராட்சி மன்ற தலைவர் யமுனா, ஒன்றிய கவுன்சிலர் நதியா, ஆத்ம கமிட்டி உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad