பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்; பரத நாட்டியத்தில் உலக சாதனை. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 7 September 2023

பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்; பரத நாட்டியத்தில் உலக சாதனை.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பரத நாட்டியத்தில் சாதனை படைத்துள்ளனர். திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் நடைபெற்ற பரதநாட்டியத்தில் ஒரே நேரத்தில் 1000 மாணவிகள் பங்குபெற்று பரதநாட்டியம் ஆடி உலக சாதனை படைத்தனர்.இந்த பரதநாட்டியத்தில் பொன்னமராவதி இளந்தளிர் கலையகம் நடன ஆசிரியர் சுகன்யா சதிஷ்குமார் தலைமையிலான பத்தொன்பது மாணவிகள் கலந்து கொண்டு தமிழகத்தில் மிகவும் தொன்மை வாய்ந்த நடனம், வெளிநாட்டினரை கவர்ந்திழுக்கும் நடனம் என்றால் அது பரத நாட்டியம் தான் என்பதையும் தெய்வீக கலை என்றும் பரத நாட்டியத்தை உலகமறிய செய்யும் வண்ணம் கீதாஞ்சலியுடன் தொடங்கிய பரத நாட்டியத்தில் மாணவிகள் பரதநாட்டியம் நடனமாடி உலக சாதனை ரெக்கார்டு செய்துள்ளனர். இம்மாணவிகளை ஊக்குவிக்கும் வண்ணம் பொன்-புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா தலைமையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன்.மேலும் பரதநாட்டியம் ஆடிய உலக சாதனை படைத்த மாணவிகள் தாம் பெற்ற பாராட்டு நற்சான்றிதழ், சீல்டினை ஆசிரியர்களிடம் காண்பித்து வாழ்த்துகளை பெற்றனர்.

- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை. 

No comments:

Post a Comment

Post Top Ad