பொன்னமராவதி அருகே ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர்களை கெளரவித்த கண்டியாநத்தம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன். - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 5 September 2023

பொன்னமராவதி அருகே ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர்களை கெளரவித்த கண்டியாநத்தம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன்.


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தை கொண்டாடுவது வழக்கம் இவ்வாண்டும் தாம் படித்த ஊராட்சி பள்ளிகளுக்குச் சென்று அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் கண்டியாநத்தம் ஊராட்சி மன்றத்தின் சார்பில் கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, க.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி,கேசராபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்று அங்கு பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு ஊராட்சி மன்றத்தலைவர் செல்வி முருகேசன் பொன்னாடை போர்த்தி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன்,ஆசிரியர், ஆசிரியைகள்,மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை. 

No comments:

Post a Comment

Post Top Ad