கீழேவேகுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்களுக்கு பரிசு வழங்கும் விழா. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 27 September 2023

கீழேவேகுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்களுக்கு பரிசு வழங்கும் விழா.


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா, பொன். உசிலம்பட்டி ஊராட்சி கீழவேகுப்பட்டியில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விநாயகர் சதுர்த்தி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து, ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி,மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தினர்,

  1. கண்ணாடிக் குழுவையில் தண்ணீர் நிரப்புதல் போட்டி,
  2. அட்டையில் கிளிப் மாட்டும் போட்டி,
  3. காலில் பந்தை எடுத்துப் போடுதல் போட்டி,
  4. வலுவினை ஊதிக் கொண்டு செல்லுதல் போட்டி,
  5. கல்லை எடுத்து வட்டத்திற்குள் விரைவாக போடும் போட்டி  

போன்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள், மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் பரிசளிப்பு விழா, பி. உசிலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திரு ஆனந்த்,அவர்கள்  தலைமையில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு ஆனந்த்,அவர்கள் முன்னிலையில், பள்ளி தலைமை ஆசிரியை  திருமதி மேகலா அவர்கள் வரவேற்புடன்,  மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.

நிகழ்வில் ஊராட்சி செயலர் திரு பழனிச்சாமி, விநாயகர் சதுர்த்தி குழு நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் என அனைவரும் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.


- எம். மூர்த்தி, தமிழக குரல்,மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை. 

No comments:

Post a Comment

Post Top Ad