புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியை அடுத்த கேசராபபட்டி சிடி சர்வதேச செகண்டரி பள்ளி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஜிம்மி ஜாஸ் ஸ்டேடியத்தில் 1.10.2023 அன்று நடைபெற்றதமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ,ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, இலட்சத்தீவுகள் ஆகிய ஐந்து மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன்பிரதேங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்ட. இந்தோனேசியா தற்காப்பு கலைகளில் ஒன்றான "பெண் காக் சிலாட்" என்ற போட்டியில். 45 கிலோ மற்றும் 60 கிலோவுக்கு உட்பட்ட பிரிவுகளில் சிடி சர்வதேசசீனியர்செகன்டரி பள்ளியைச் சேர்ந்த மாணவிகளான நித்திலா மற்றும் ஓவியா வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.
மேலும் அகில இந்திய அளவிலான போட்டிக்கும் தேர்வாகியுள்ளனர் வெற்றி பெற்ற மாணவிகளையும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர் பாலமுருகனையும் பள்ளியின் நிறுவனர் பழ. சிதம்பரம் தாளாளர் திருமதி அன்னம் சிதம்பரம் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினார்.
- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment