புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாரம் வேந்தன்பட்டி ஊராட்சி சூரன்கோடாங்கி வளவு என்ற இடத்தில் மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக 11.9.23 இன்று பொதுமக்களிடம் தொற்றா நோய்களான சர்க்கரை நோய்_ இரத்த அழுத்த நோய் மற்றும் ஏடிஸ் கொசுக்கள் மூலம் ஏற்படும் டெங்கு காய்ச்சல் ஆகியவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சுகாதார ஆய்வாளர் நா .உத்தமன்_ நல்ல தண்ணீர் மழை தண்ணீர் இவற்றை நீண்ட நாட்கள் பாதுகாப்பாக மூடி வைக்காததால் ஏற்படும் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிடல் & லார்வா(புழுக்கள்) & முதிர் கொசு உருவாகுதல் இவற்றை தடுப்பது அழிப்பது போன்ற விழிப்புணர்வு தகவல்களும் மற்றும் தொற்றா நோய்களான இரத்த அழுத்தம் சர்க்கரை நோய் குறித்தும் சிகிச்சை முறைகளும் விரிவான தகவல்களை பொதுமக்களிடம் கூறினார் இதில் 50 க்கும் மேற்பட்டோர்கள் பிரேம்குமார் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment