இதில் 07ஆசிரியர்கள் பங்கேற்றனர் அதனை தொடர்ந்து கருதக்கோடன்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டவர்களிடம் தொற்றா நோய்களான சர்க்கரை நோய் இரத்த அழுத்த நோய் மற்றும் ஏடிஸ் கொசுக்கள் மூலம் ஏற்படும் டெங்கு காய்ச்சல் ஆகியவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சுகாதார ஆய்வாளர் நா.உத்தமன் நல்ல தண்ணீர் மழை தண்ணீர் இவற்றை நீண்ட நாட்கள் பாதுகாப்பாக மூடி வைக்காததால் ஏற்படும் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிடல் & லார்வா (கொசுப்புழுக்கள்) & முதிர் கொசு உருவாகுதல் இவற்றை தடுப்பது அழிப்பது போன்ற விழிப்புணர்வு தகவல்களும் மற்றும் தொற்றா நோய்களான இரத்த அழுத்தம் சர்க்கரை நோய் குறித்தும் மருத்துவர் வழி சிகிச்சை முறைகளும் விரிவான தகவல்களை பொதுமக்களிடம் கூறப்பட்டது சு. ஆ பிரேம்குமார் கலந்து கொண்டார்.
- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment