கருப்புக்குடிப்பட்டி கிராமத்தில் டெங்கு/ தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 12 September 2023

கருப்புக்குடிப்பட்டி கிராமத்தில் டெங்கு/ தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாரம் திருக்களம்பூர் ஊராட்சி கருப்புக்குடிப்பட்டி கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி மற்றும் கருதக்கோடன் பட்டி பொதுமக்களுக்கு மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக 12.9.23 கருப்புக் குடிப்பட்டி உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் முன்னிலையில 202 மாணவ மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விரிவான விழிப்புணர்வு ஏடிஸ் கொசுப் புழுவை காண்பித்து நேரடி விளக்கமளிக்கப்பட்டது.

இதில் 07ஆசிரியர்கள் பங்கேற்றனர் அதனை தொடர்ந்து கருதக்கோடன்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டவர்களிடம் தொற்றா நோய்களான சர்க்கரை நோய் இரத்த அழுத்த நோய்  மற்றும் ஏடிஸ் கொசுக்கள் மூலம் ஏற்படும் டெங்கு காய்ச்சல் ஆகியவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் சுகாதார ஆய்வாளர் நா.உத்தமன் நல்ல தண்ணீர் மழை தண்ணீர் இவற்றை நீண்ட நாட்கள் பாதுகாப்பாக மூடி வைக்காததால் ஏற்படும் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிடல் & லார்வா (கொசுப்புழுக்கள்) & முதிர் கொசு உருவாகுதல் இவற்றை தடுப்பது அழிப்பது போன்ற விழிப்புணர்வு தகவல்களும் மற்றும் தொற்றா நோய்களான இரத்த அழுத்தம் சர்க்கரை நோய் குறித்தும் மருத்துவர் வழி சிகிச்சை முறைகளும் விரிவான தகவல்களை பொதுமக்களிடம் கூறப்பட்டது சு. ஆ பிரேம்குமார் கலந்து கொண்டார்.


- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

No comments:

Post a Comment

Post Top Ad