புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஏனாதி கிராமத்தில் உள்ள கண்டனிக்கண்மாயில் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இது கிராமப்புறங்களில் கோடை காலங்களில் தண்ணீர் வற்றியதும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பாரம்பரியம் சார்ந்த விழாவாக இவ்விழாவை தொன்றுதொட்டு நடத்தி வருகின்றனர்.
இந்த மீன்பிடி திருவிழாவில் பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாரம்பரிய மீன் பிடி உபகரணங்களான தூரி, கச்சா, பரி, வலை, ஊத்தா உள்ளட்ட உபகரணங்களை கொண்டு கண்மாயில் இறங்கி உற்சாகமாக மீன்களை பிடித்தனர்.
இதில்நாட்டு வகை மீன்களான விரால் கெண்டை,கட்லா, கெழுத்தி ,குரவை ,ஐரை உள்ளிட்ட மீன்களை லாபகரமாக பிடித்து மகிழ்ந்தனர். ஜாதி மத சகோதரத்துவத்துடன் ஒரே நேரத்தில் கண்மாயில் இறங்கி மீன் பிடித்தது காண்போரை கவர்ந்தது.
No comments:
Post a Comment