மணமேல்குடி ஒன்றியத்தில் ஒன்று முதல் மூன்றாவது வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 8 July 2023

மணமேல்குடி ஒன்றியத்தில் ஒன்று முதல் மூன்றாவது வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியதிற்கு உட்பட்ட   மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்று முதல் மூன்றாவது வரை கற்பிக்கின்ற தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நடைபெறும் குறுவள மைய பயிற்சியினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்புக்குரிய திருமதி இந்திராணி அவர்களின் தலைமையில் தொடங்கியது. வட்டார வளமைய மேற்பார்வையாக பொறுப்பு திருமதி சிவயோகம் முன்னிலை வகித்தார்.


இப்பயிற்சியில் உடல் நலம் ஆரோக்கியம் மற்றும் சிறப்பு வாய்ந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பு முறைகள் குறித்த சிறப்பு பயிற்சிகள்  மாணவர்களுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சி முறைகள்  குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.


இப்பயிற்ச்சினை கருத்தாளர்களாக ஆசிரியர்கள் கொடிரசி ,ஷோபனா அன்னை தெரசா, லதா, கலைச்செல்வி மற்றும் ஜெபமாலை மேரி ஆகியோர் செயல்பட்டனர். இப் பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் வேல்சாமி அங்கயற்கன்னி ஆகியோர் கலந்து கொண்டனர்.


_எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர். 

No comments:

Post a Comment

Post Top Ad