பொன்னமராவதி ஒன்றியத்தில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 5 July 2023

பொன்னமராவதி ஒன்றியத்தில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றிய பகுதியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. பொன்னமராவதி வடக்கு ஒன்றிய திமுக சார்பில் நல்லூர், வாழைக்குறிச்சி, கோவனூர் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை பிரச்சாரத்திற்கு வடக்கு ஒன்றியச் செயலாளர் முத்து தலைமை வகித்தார். 


வடக்கு ஒன்றிய துணைச்செயலாளர் முருகேசன், திருமயம் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலவயல் முரளிசுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட கவுன்சிலர் மீனாட்சி மணிகண்டன், ஒன்றிய துணைச்செயலாளர் சுரேஸ் பாண்டியன், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். இத்தெருமுனை பிரச்சாரத்தில் தமிழுகத்துக்காகவும், தமிழ் மக்களுக்காவும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் திமுக ஆட்சி நடைபெறுகிறது என்றும் இது மக்களுக்கான ஆட்சி என்றும் மாநில செய்தித் தொடர்பு இணைச்செயலாளர் பொள்ளாச்சி சித்திக் சூளுரைத்தார். 


இந்நிகழ்வில் அண்ணாதுரை, இளைஞரணி துணை அமைப்பாளர்  கீழத்தானியம் நாராயணன் மற்றும் அரசியல் பிரமுகர்கள்,கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


- எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad