தமிழ்நாடுஅரசு மருத்துவம்மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவுப்படி புதுக்கோட்டை மாவட்ட தொழுநோய் அலுவக இயக்குனர் அறிவுறுத்தல் மற்றும்பொது சுகாதாரத் துறை இயக்குனர் வழிகாட்டலின்படி பொன்னமராவதி வட்டாரம் முழுவதும் வீடுகள் தோறும் 142 தன்னார்வலர்கள் மற்றும்12 மேற்பார்வையாளர்கள் மூலம் தினசரி இல்லம் தேடி தீவிரதொழுநோய் தேமல் (சிவந்த வெளிர்ந்த உணர்ச்சியற்ற படை) கண்டுபிடிப்பு பணி 17.07.2023 முதல் 02.08.2023 வரை நடைபெறுகிறது இவ்வாறு நடைபெறுகின்ற களப்பணியினை வேந்தன்பட்டியில் மோசஸ் மருத்துவமல்லாமேற்பார்வையாளர் ஆய்வு செய்தார்.
உடன் சுகாதார ஆய்வாளர்கள் நாஉத்தமன் பிரேம்குமார் உடனிருந்தனர் மேலும் மேலைச்சிவபுரியில் மாணவ மாணவிகள் விடுதியில் சிறப்பு மருத்துவ முகாம் டாக்டர் பூபதிராஜன் தலைமையில் நிகழ்ந்தது சிறு நோய்க்கு சிகிச்சை பரிந்துரைகள் செய்யபட்டது இம் முகாமில் தொழுநோய் தேமல் குறித்து பரிசோதனை விளக்கவுரை நிகழப் பெற்றது விடுதி காப்பாளர்கள் திரு மோசஸ், சுகாதார ஆய்வாளர்கள் நா. உத்தமன், பிரேம்குமார் ஆகியோர்களும் 100 மாணவ மாணவிகளும் பங்கேற்றனர்கள் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்.
- நா. உத்தமன் மேற்க்கொண்டார்கள்
No comments:
Post a Comment