மணமேல்குடி ஒன்றியதிற்கு உட்பட்ட மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு பயிற்சியினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் திரு செழியன் தலைமையில் தொடங்கியது.
மணமேல்குடி வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி இந்திராணி மற்றும் மணமேல்குடி வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள், இப்பயிற்சியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு கற்றல் விளைவுகள் குறித்த விளக்கங்களையும் செயல்பாடுகளையும் ஆசிரியர்களுக்கு குழு செயல்பாடுகளாகவும் வழங்கப்பட்டது.
மேலும் ஒவ்வொரு பாடத்துக்கு உள்ள கற்றல் விளைவுகளை மாணவர்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இப்பயிற்ச்சியில் கருத்தாளர்களாக தலைமை ஆசிரியர் பாசிமதி ஆசிரியர் பயிற்றுநர் வேல்சாமி மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் இளமாறன் ராஜகுமாரி ஆகியோர் செயல்பட்டனர். இப் பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுநர் அங்கயற்கன்னி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- எம். மூர்த்தி, மாவட்ட செய்தியாளர்.
No comments:
Post a Comment