புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை வட்டார தளபதிகள் தேர்விற்கு கல்வித்தகுதி பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்களாக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 50 வயதுக்குள் இருத்தல் வேண்டும். இது ஒரு கௌரவப்பதவி என்பதால் ஊதியம் ஏதும் வழங்கப்படமாட்டாது.தேசிய மாணவர் படையில் பயிற்சி பெற்ற விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் உயர் பதவி வகிப்பவர்கள் துணை வட்டார தளபதி பதவியில் சேர்ந்து தொண்டு செய்ய விருப்பம் மற்றும் சேவை மனப்பான்மை உடைய ஆண்/பெண் நபர்கள் விண்ணப்பிக்கலாம்.


துணை வட்டார தளபதி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவத்தினை புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம், பிறப்பு சான்றிதழ், கல்வித்தகுதிக்கான சான்றிதழ், அரசு மருத்துவரிடம் பெறப்பட்ட மருத்துவ சான்றிதழ், 2 போட்டோக்கள் ஆகியவற்றை காவல் கண்காணிப்பாளர், புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை 622001 என்ற முகவரிக்கு 23.06.2023 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment