

மேலும் ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து 403 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. தொடர்ந்து ஜமாபந்தியின் நிறைவாக குடிகள் மாநாடு நடைபெற்றது.குடிகள் மாநாட்டிற்கு மாவட்ட வருவாய் அலுவலர், (ஜமாபந்தி) அலுவலருமான மா.செல்வி தலைமைவகித்து பேசுகையில் பொன்னமராவதியில் நடைபெற்ற ஜமாபந்தியில் அதிகப்படியான மனுக்கள் பெறப்பட்டதாகவும், பெறப்பட்ட மனுக்களுக்கு 20 நாட்களில் தீர்வு காணப்படும் என்று பேசினார். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர், (ஜமாபந்தி) அலுவலருமான மா.செல்வி பயனாளிகளுக்கு கணினிப் பெயர் திருத்தம்,உறவுமுறை திருத்தம், பட்டாமாறுதல் உத்தரவு, வீட்டுமனைப்பட்டா, அடங்கல் நகல், மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஜம்பந்தி அலுவலர் மா.செல்வி வழங்கினார்.
இந்நிகழ்வில் பொன்னமராவதி வட்டாட்சியர் பிரகாஷ் துணை வட்டாட்சியர்கள் சேகர், திலகவதி, துணை ஆய்வாளர் ( நில அளவை ) கார்த்திகேயன், வட்ட வழங்கல் அலுவலர் திருப்பதி வெங்கடாசலபதி, பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ.கணேசன், வேளாண் அலுவலர் முருகன், உதவி இயக்குநர் கலால் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவவலர்கள், கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர். முன்னதாக மண்டல துணை வட்டாட்சியர் சேகர் அனைவரையும் வரவேற்றார். தனி வட்டாட்சியர் வெள்ளைச்சாமி நன்றியுரை வழங்கினார்.
- எம். மூர்த்தி, பி. காம்
No comments:
Post a Comment