புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி மஞ்சுளா அவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் திரு.நடராஜன் அவர்கள் ஆகியோர் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்தில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் மதிப்பிற்குரிய திரு கோபாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் பயிற்சி தொடங்கியது.


இப்பயிற்சியில் ஆசிரியர் உடல் நலம் மற்றும் மனநலம் சார்ந்த தகவல்களை செயல்பாடுகள் மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் தேசிய சுகாதார திட்டம் தேசிய குழந்தைகள் நலத்திட்டம் மற்றும் தேசிய வளரிளம் பருவத்திற்கான நல்வாழ்வு திட்டம் குறித்த விரிவான கருத்துகளை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
இப்ப பயிற்சியினை முதுகலை ஆசிரியர்கள் திரு.ஜேசுதாசன் திரு.பிரகாசம் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர். இப்பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்கள் செய்திருந்தார்.
- எம். மூர்த்தி, பி. காம்,. செய்தியாளர்.
No comments:
Post a Comment