வேகுப்பட்டியில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி:சுவரோவியத்தில் அசத்தும் ஊராட்சி நிர்வாகம். - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 4 June 2023

வேகுப்பட்டியில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி:சுவரோவியத்தில் அசத்தும் ஊராட்சி நிர்வாகம்.


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2023-2024 ஆண்டு புதிய மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு சுவரோவியம் பலரும் பாராட்டு தெரிவிப்பு. வேகுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி சுற்றுச்சுவர் முழுவதும் கல்வியின் அவசியம் குறித்த சுவரோவியம் வரைந்து புதிய மாணவர்கள் சேர்க்கையாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றர்.

இது குறித்து அப்பகுதி இளைஞர் குமார் பேசுகையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக திறன் மிக்க ஆசிரியர்களை கொண்டு செயல்பட்டு வரும் வேகுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2023-2024 ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும், மாவட்ட அளவில் புதிய மாணவர்கள் சேர்க்கையில் முதலிடம் பெற்றிடவும் இப்பள்ளி ஆசிரியர்கள் செயல்பட்டு வருவது போற்றத்தக்கது என்று குமார் புகழாரம் சூட்டினார். 


இதுபோன்று வேகுப்பட்டி ஊராட்சியில் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு வேகுப்பட்டி  ஊராட்சி பகுதியில் உள்ள சுற்றுச்சுவர்களின் தமிழர்களின் கலை, கலாச்சாரம், ஒன்றுமை, வரலாறு போன்றவற்றை பறைசாற்றும் வண்ணம் பல்வேறு சுவரோவியங்களை வரைந்து மாவட்ட ஆட்சியரின் பாராட்டை பெற்ற நிர்வாகம் வேகுப்பட்டி ஊராட்சி நிர்வாகம் என்பது பெருமைக்குரியது.


- எம். மூர்த்தி, பி. காம்,. தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

No comments:

Post a Comment

Post Top Ad