புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சி பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பொன்னமராவதி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பிரவீன்குமார், பொன்னமராவதி உணவு பாதுகாப்பு அலுவலர் கார்த்திக் ஆகியோர் பல்வேறு பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

அப்போது பிரதான சாலையில் உள்ள பழக்கடையில் ஆய்வு செய்த போது அங்கு சுமார் 450 கிலோ கல் வைத்த மாம்பழத்தையும் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பிரவீன்குமார், பொன்னமராவதி உணவு பாதுகாப்பு அலுவலர் கார்த்திக் ஆகியோர் பறிமுதல் செய்தனர்.
மேலும் பறிமுதல் செய்த கல் வைத்த மாம்பழங்களை பேரூராட்சி பணியாளர்களை கொண்டு அப்புறப்படுத்தினர். அதேபோன்று பல்வேறு கடைகளில் ஆய்வு செய்ததில் மொத்தம் ஆயிரம் கிலோ கல் வைத்த பழங்களை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
_எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment