
கருப்புக்குடிப்பட்டி கிராம மக்களின் கோரிக்கையேற்ற சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி குண்டும் குளியுமாக உள்ள சாலையை சீரமைக்க கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்ததாகவும். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்காமல் கிடப்பில் போட்டு உள்ளதாகவும் அதனை கண்டித்து கிராமமக்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து குண்டும் குளியுமாக உள்ள கருப்புக்குடிப்பட்டி சாலையில் இன்று நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இது சம்மந்தமாக பேசிய அக்கிராம இளைஞர்கள் கருப்புக்குடிப்படி சாலையை சீரமைக்கும் பணியினை தொடங்க வேண்டும் என்றும். சாலை சீரமைக்காமல் மீண்டும் கிடப்பில் போடபட்டால் கிராம மக்கள் ஒன்றிணைந்தது குடும்ப அட்டை, வாக்காளர் அட்டையை திருப்பி ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்தது உள்ளதாகும் கூறினர். மேலும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அவர்கள் நேரடியாக தலையிட்டு கருப்புக்குடிப்பட்டி கிராம மக்களின் பத்தாண்டு கால கோரிக்கையை ஏற்று பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள்,வாகனங்கள் செல்ல இப்பகுதி சாலையை சீரமைத்து தர வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு கருப்புக்குடிப்பட்டி கிராம மக்கள், இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
_எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment