தொலைந்து போன 105 மொபைல் போன்களை கண்டறிந்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே பாராட்டு. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 5 May 2023

தொலைந்து போன 105 மொபைல் போன்களை கண்டறிந்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே பாராட்டு.


புதுக்கோட்டை மாவட்டத்தில் இருபத்தொரு லட்சத்தி ஐம்பதாயிரம் மதிப்புள்ள தொலைந்து போன 105 மொபைல் போன்களை கண்டறிந்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த காவல் துறையினருக்கு மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே பாராட்டு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருபத்தொரு லட்சத்தி ஐம்பதாயிரம் மதிப்புள்ள தொலைந்து போன 105 மொபைல் போன்களை கண்டறிந்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த காவல் துறையினருக்கு போலீஸ் எஸ்பி. வந்திதா பாண்டே பாராட்டு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிப்பு.புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்கள் காவல் நிலையங்களில் பதிவான தொலைந்த போன மொபைல் போன் வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.



அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் கடந்த ஒரு வாரத்தில் சைபர் கிரைம் காவல்துறை மூலம் சுமார் ரூ.21,50,000/- இருபத்தொரு லட்சத்தி ஐம்பதாயிரம் மதிப்புள்ள தொலைந்து போன 105 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு புதுக்கோட்டை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்களால் இன்று 05.05.2023 தேதியன்று உரிய நபர்களிடம் வழங்கப்பட்டது.இதில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே பாராட்டு நற்சான்றிதழ் வழங்கி காவலர்களை வெகுவாகப் பாராட்டினார்.


இதேபோன்று கடந்த ஆண்டுகளில் இரண்டு முறை 170 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.மேலும் இனிவரும் காலங்களிலும் காணாமல் போன செல்போன் சம்மந்தமான புகார்களில் துரித நடவடிக்கை மேற்கொண்டு செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைக்க காவல் கண்காணிப்பாளர் உத்தரவிடப்பட்டுள்ளது.


- எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

No comments:

Post a Comment

Post Top Ad