பொன்னமராவதியில் கடும் போக்குவரத்து நெரிசலை தடுக்க போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரை நியமிக்க வேண்டுமென மத்திய மண்டல காவல்துறை தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு பொதுமக்கள் கோரிக்கை.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல். பொன்னமராவதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் பெருகி கொண்டே இருப்பதால் அதனை தடுக்க திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் இ.கா.ப., அவர்களும் மற்றும் துணைத் தலைவர் சரவண சுந்தர் இ.கா.ப., அவர்களும் நேரடியாக தலையிட்டு பொன்னமராவதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரை நியமனம் செய்து பொன்னமராவதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவிட வேண்டும் என்று காவல்துறை தலைவர், துணைத்தலைவருக்கு பொன்னமராவதி பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
_எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment