
மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்போருக்கு வருகின்ற மார்ச் 19 அன்று தேர்வு நட இருப்பதினால் அனைத்து தலைமை ஆசிரியர்களும் தேர்வினை சிறப்பாக நடத்தி கொடுக்க வேண்டும் என்றும், மேலும் புதிய பாரத தன்னார்வலர்களுக்கு ஸ்லோகன் எழுதுதல் போட்டியில் வெற்றி பெற்ற தன்னார்வலர்களுக்கு முதல் பரிசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வடக்கு அம்மா பட்டினம் மீனவர் காலனி மையத்தை சேர்ந்த தன்னார்வலர் சந்தியா 1000 ரூபாய் ரொக்கம் பரிசும் மற்றும் இரண்டாம் பரிசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பொன்னகரம் மையத்தை சேர்ந்த தன்னார்வலர் மகா 750 ரூபாய் ரொக்கம் பரிசும் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையத்தை சேர்ந்த 36 தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் வேலுசாமி அங்கையர் கன்னி மற்றும் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் அவர்களும் கலந்து கொண்டனர்.
- எம். மூர்த்தி, பி. காம்,. தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment