மேலும் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் விஜயபாஸ்கர் பேசுகையில் தமிழ்நாடு முழுவதும் தமிழர்களுடைய பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும், வீரத்தையும், பறைசாற்றும் வகையில் ஆறு மாதங்களுக்கு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி சிறப்பாக ஜல்லிக்கட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று ஜல்லிக்கட்டுக்கு மேல் நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு அதிகமாக நடக்கக்கூடிய மாவட்டமாகவும் ஜல்லிக்கட்டு கலை கட்டக் கூடிய மாவட்டம் நம் புதுக்கோட்டை மாவட்டம் ஆகும் என்றும்.ஜல்லிக்கட்டு என்பது ஒரு பாரம்பரிய திருவிழா, ஜல்லிக்கட்டில் ஆன்லைன் டோக்கன் என்பது விழா குழுவினரை வேதனை செய்யக்கூடிய விஷயமாக உள்ளதாகவும்.கிராம கமிட்டி எந்த காளைகளை அனுமதிக்கிறார்களோ எந்த ஊரின் காளையை விரும்புகிறார்களோ அந்த விருந்தோம்பல் முறை இந்த முறையில் முழுவதுமாக தவிர்க்கப்படுகிறது. விருந்தோம்பலை ரத்து செய்யக்கூடிய எந்த முறையும் தேவையில்லை என்றும், விரைவில் ஆன்லைன் முறையை ரத்து செய்துவிட்டால் நானே முன்நின்று என்னுடைய தலைமையில் ஆயிரம் ஜல்லிக்கட்டு காளைகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை சூழ்ந்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் சூழல் ஏற்படும் என்றும், உடனடியாக மாவட்ட நிர்வாகம், அரசு கால்நடைத்துறை ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் விழா குழுவினருக்கு தான் டோக்கன் வழங்கும் உரிமை உள்ளதென்றும், விரைவில் ஆன்லைன் டோக்கனுக்கு எதிரான போராட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்படும் என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment