மணமேல்குடி ஒன்றியம், மேலஸ்தனம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 21 March 2023

மணமேல்குடி ஒன்றியம், மேலஸ்தனம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது.


மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் திரு செழியன் அவர்கள், தலைமையில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் திருமதி சிவயோகம், ஊராட்சி மன்ற தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ,எஸ் எம் சி தலைவர் ஆகியோர் முன்னிலையிலும் விழா நடைபெற்றது.

விழாவில் தலைமையாசிரியர் திருமதி வாசுகி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். எண்ணும் எழுத்தும்  சிறு கண்ணோட்டம் பற்றி திருமதி பெனிலா அவர்கள் உரையாற்றினார். வட்டார கல்வி அலுவலர், மேற்பார்வையாளர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். பெற்றோர்கள் எண்ணும் எழுத்தும் கண்காட்சியை கண்டனர். 



மாணவர்களின் படைப்புகளையும் கலை நிகழ்ச்சிகளையும் பார்த்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சிகளில் மாணவர்களோடு பெற்றோர்களும் மகிழ்வோடு கலந்து கொண்டனர். விழாவில் ஆசிரியர்கள் சித்ரா, மலர்விழி, கற்பகம், கார்த்தீஸ்வரி, சத்துணவு அமைப்பாளர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


எண்ணும் எழுத்தும் சுயபடப்பலகையில் மாணவர்களும் பெற்றோர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். திருமதி ஜெசிந்தா அவர்கள் நன்றி உரை வழங்க விழா நிறைவடைந்தது.


எம். மூர்த்தி, பி. காம்,.தமிழக குரல்,மாவட்ட செய்தியாளர். 

No comments:

Post a Comment

Post Top Ad