மின்சார வாரிய ஒப்பந்த பணியாளர்களை நிரந்த பணியமர்த்த வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 17 March 2023

மின்சார வாரிய ஒப்பந்த பணியாளர்களை நிரந்த பணியமர்த்த வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் தமிழகம் முழுவதும் மின்சார வாரிய ஒப்பந்த பணியாளர்களை நிரந்த பணியமர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு மின்சார வாரிய தற்காலிக பணியாளர்கள் கோரிக்கை.கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் மின்சார வாரியத்தில் தற்காலிக பணியாளர்களாக வேலைக்கு சேர்ந்த மின்சார வாரிய பணியாளர்கள் கஜா புயல், நிவர் புயல் மற்றும் மழை காலங்களில் தங்களின் உயிரையும் பொருப்படுத்தாமல் இரவு, பகல் பாராமல் மின் கம்பத்தில் ஏறி நின்று பணி செய்து வருகின்றனர் என்றும். தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் மாண்புமிகு செந்தில் பாலாஜி அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்த பணியமர்த்த மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று ஒப்பந்த தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

மேலும் இது குறித்து ஒப்பந்த பணியாளர்கள் பேசுகையில் மழை,புயல் என எதுவாக இருந்தாலும் எங்கள் உயிரை பணையம் வைத்து மின் கம்பத்தில் ஏறி பணி செய்து வருகிறோம் என்றும், தமிழகத்திற்கு விடியல் தந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழகம் முழுவது ஒப்பந்த அடிப்படையில் மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் நிரந்த பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மின்சார வாரிய ஒப்பந்த பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


- எம். மூர்த்தி, பி. காம்,. தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை. 

No comments:

Post a Comment

Post Top Ad