பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறக்கப்பட்டது. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 27 January 2023

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஊராட்சியில் சுத்திகரிகப்பட்ட தூய குடிநீர் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.

வேகுப்பட்டியை சேர்ந்த அ.பழ.சுப.முரு.சுப்பு நினைவாக சுப.முருகப்பன், எம்ஆர்.தேனம்மை குடும்பத்தினர் சார்பில் ரூபாய் இரண்டு லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட சுத்திகரிகப்பட்ட தூய குடிநீர் திறப்பு விழா, ஊராட்சி மன்றத் தலைவர் மெ.அர்ச்சுனன், துணைத்தலைவர் பெரி.முத்து ஆகியோர் தலைமை தாங்கினர்.வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜு முன்னிலை வகித்தார்.


புதிததாக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை ஒன்றியப்பெரும் தலைவர் சுதா  அடைக்கலமணி ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார். சுப.முருகப்பன் குடிநீர் இயந்திரத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர், பொதுமக்கள், இளைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


- எம். மூர்த்தி, தமிழக குரல் மாவட்ட செய்தியாளர் 

No comments:

Post a Comment

Post Top Ad