மருங்கூரணி தொடக்க பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 28 February 2024

மருங்கூரணி தொடக்க பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம்  தொடக்க பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது இந்நிகழ்விற்கு ஊராட்சி மன்ற  தலைவர் புவனேஸ்வரி இராமகிருஷ்ணன்  தலைமை வகித்தார்.

வட்டார வள மைய மேற்பார்வையாளர் கு.பிரகாஷ், ஊர் முக்கியதஸ்தர்  கோவிந்தராஜ்,சுந்தம்பட்டி ஒன்றியக்குழு  பாரதிப்பிரியா அய்யாதுரை உள்ளிட்டோர் முன்னிலை வைத்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் துரையரசன் அனைவரையும் வரவேற்று தொகுத்து வழங்கினார். ஆண்டறிக்கையை பள்ளியின்  இடைநிலை ஆசிரியர் ராமலெட்சுமி வாசித்தார்.


இந்நிகழ்வில் ஒய்வு பெற்ற காவல் துறை உதவி ஆய்வாளர்கள் ராமச்சந்திரன்,முத்து தங்கப்பா, ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன்,சங்க பிரதிநிதிகள் வேலாயுதம், சின்னராஜா, சேகர், ராஜேந்திரன்,  இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்  ரகமதுல்லா  உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.


ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய பால் பாண்டியன்,காவலர் செந்தமரை கண்ணன்,வார்டு உறுப்பினர் ஜெயராணி,


நிறைவாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் முத்துசாமி நன்றி கூறினார் . 

No comments:

Post a Comment

Post Top Ad