திருக்களம்பூர் அங்கன்வாடி மையத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் தொடர் முகாம். - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 19 September 2023

திருக்களம்பூர் அங்கன்வாடி மையத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் தொடர் முகாம்.


புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, மேலைச்சிவபுரி தமிழ்நாடு அரசு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவின்படி 19.9.23 முதல் 23.9.23 வரை 06 மாத குழந்தைகள் துவங்கி 60 மாதங்கள் உள்ளடக்கிய அனைவருக்கும் வைட்டமின் திரவம். வழங்கப்படும், அந்த அந்த பகுதி ஆரம்ப சுகாதார நிலையம்/துணை சுகாதார நிலையம்/அங்கன்வாடி மையங்களில் இந்த வைட்டமின் திரவம் வழங்கப்பட்டும்.

இதில்  விடுபடுவோர்க்கு 25.9.23 அன்று அனைவருக்கும் வழங்க ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளது, இதன் துவக்க நாளான இன்று19.9.23 திருக்களம்பூர் அங்கன்வாடி மையத்தில் ஏராளமான குழந்தைகளுக்கு இந்த திரவம் வழங்கப்பட்டது, இதில் கிராம சுகாதாரசெவிலியர் அங்கன்வாடி அலுவலர்கள் உதவியாளர்கள் சுகாதார ஆய்வாளர் ஆகியோர்கள் பங்கேற்றனர்.


தொடர்ச்சியாக திருக்களம்பூர் அண்ணா நகர் அரசு துவக்கப்பள்ளியில் சுகாதார ஆய்வாளர் நா. உத்தமன் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்த்தினார். இதில் தலைமையாசிரியர்/ டெங்கு களப்பணியாளர்கள் பங்கேற்றனர். 


- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை. 

No comments:

Post a Comment

Post Top Ad