புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் 18 விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு அமரகண்டான் ஊரணியில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
ஊர்வலத்திற்கு விநாயகர் சதுர்த்தி விழாக்குழுவினர் மாதவன் தலைமைவகித்தார். செயற்குழு உறுப்பினர் சேதுபதி முன்னிலை வகித்தார். முன்னாள் பேரூராட்சித்தலைவர் ராஜா ஊர்வலத்தினை தொடங்கிவைத்தார்.
பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயில் முன்பு தொடங்கிய ஊர்வலம் நாட்டுக்கல், வலையபட்டி, காந்தி சிலை, அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக வந்து அமரகண்டான் ஊரணியில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்தில் நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம், இந்திராநகர், பூக்குடி வீதி, நகைக்கடை பஜார், அம்மன் கோவில் வீதி உள்ளிட்ட 18 விழாக்குழுக்கள் சார்பில் 18 விநாயகர் சிலைகள் எடுத்துச்செல்லப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழாக்குழு செயலர் பாண்டியன், பொருளர் குமரன், நிர்வாகிகள் பாஸ்கர், காமராஜ், செந்தில்குமார், மணிமாறன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸார் செய்திருந்தனர்.
- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment