பள்ளியில் இரத்த வகை கண்டறியும் முகாம். - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 20 July 2023

பள்ளியில் இரத்த வகை கண்டறியும் முகாம்.


பொன். புதுப்பட்டி ரோட்டரி சங்கம் ஸ்ரீ துர்க்கா மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்த வகை கண்டறியும் முகாம் கட்டையாண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது, பொன் புதுப்பட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரோட்டரி சங்கமும் பொன்னமராவதி ஸ்ரீ துர்க்கா மருத்துவமனையும் இணைந்து நடத்திய மாணவர்களுக்கு இரத்த வகை கண்டறியும் முகாம் இன்று காலை 10 மணி அளவில் கட்டையாண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் ‌துர்க்கா மருத்துவமனையைச் சேர்ந்த கரு.ஆறுமுகம் அவர்கள் தலைமையிலான ஆய்வகப் பணியாளர்கள் மாணவர்களிடையே இரத்த மாதிரிகளைச் சேகரித்து அவர்களின் இரத்த வகையினைக் கண்டறிந்தனர், நிகழ்வுக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் சிபூ. முடியரசன் தலைமை தாங்கினார் . செயலர் மெ.இராமச்சந்திரன், பொருளாளர் அ.தட்சிணாமூர்த்தி தலைமையாசிரியர் அழகு ஆசிரியர்கள் இந்துமதி, ரத்னா,  விலாசினி, உமாமகேஸ்வரி, ஜீவா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார். இந்த முகாமில் 68 மாணவர்கள் பயன் பெற்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad