புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஒன்றியக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சாதாரண கூட்டத்திற்கு ஒன்றியப்பெரும் தலைவர் சுதா அடைக்கலமணி, ஒன்றிய குழு துணைத்தலைவர் தனலெட்சுமி அழகப்பன் ஆகியோர் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜு, குமரன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கியது.

முன்னதாக வரவு செலவு கணக்குகளை வாசித்தனர். இதில் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் விவாதித்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- எம். மூர்த்தி, பி. காம்,. செய்தியாளர், புதுக்கோட்டை மாவட்டம்.
No comments:
Post a Comment