புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பதினெட்டாவது ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பொன்னமராவதி கிரீன்வே ரைடர்ஸ் ஸ்கேட்டிங் கிளப் சார்பில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.
இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகி உள்ளனர். இதில் பயிற்சியாளர்கள் சுப்புராஜ் மற்றும் ஹரி ஆகியோரை மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டது.
- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment